Monday, November 7, 2016

இனி வார வாரம் பலகாரங்கள் 



தேன்கனி மதிப்புக்கூட்டல் தீபாவளிப் பலகாரங்கள் :
*********************************************************************
நம்மாழ்வார் ஐயா அடிக்கடி கூறுவார்.
பொருளை மதிப்புகூட்டல் என்பது மிக முக்கியமானது. அந்த துறையில் நாம் எப்போது பலம் வாந்தவர்களாக மாறுகிறோமோ அப்போது தான் இயற்கை வழி விவசாயம் ( வாழ்வியல்) என்பது முழுமையடையும்.
ஒரு விவசாயி என்பவர் முதலில் தானியத்தை தானியமாக விற்காமல் அரிசியாக விற்க முயலவேண்டும். பின்னர் அதை மாவாக மாற்றி விற்க வேண்டும்.
அது போல நிலக்கடலையை உடைத்து பருப்பாக விற்க வேண்டும். பின்னர் அதை எண்ணெய்யாக மாற்ற வேண்டும். அதன் பின் பருப்பை செக்கில் கொடுத்து எண்ணெய்யாக மாற்ற வேண்டும்.
பின் ஏற்கனவே உள்ள அரிசி மாவையும், தற்போது செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்யையும் சேர்த்து அதிரசமாகவும், முறுக்காவும், லட்டாகவும், மாவு உருண்டையாகவும் மாற்றி மதிப்புக் கூட்ட வேண்டும்.
அப்போது சமூகத்தில் விவசாயம் சார்ந்த வேலை வாய்ப்புகள் பெருகும். மக்களுக்கு கலப்படமில்லா ஆரோக்கிய உணவுகள் அருகிலே கிடைக்கும். அமெரிக்காவிலிருந்தும், ஆஸ்திரேலியாவிலிருந்தும் மற்றும் பல உலக நாடு களிலிருந்தும் நமக்கு முற்றிலும் பழக்கமில்லாத Fast food என்கிற slow Poison food .
slow Poission food என்பது உற்பத்தி செய்ததிலிருந்து குறைந்தது ஒரு மாதம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வந்து, அந்த நாட்டின் தலை நகரத்தில் குறைந்தது 1மாதம் பின் மாநிலத்தின் தலை நகரத்தில் குறைந்தது 1மாதம் , பின் மாவட்த்தின் தலை நகரத்தில் குறைந்தது 1மாதம், பின் ஊரின் மொத்த வியாபாரியிடத்தில் குறைந்தது 1மாதம் பின் சில்லறைக் கடைக்காரரின் கடையில் குறைந்தது 1மாதம் , இறுதியாக நுகர்வோரின் வீட்டில் ஃப்ரிட்ஜில் குறைந்தது 1மாதம் என குறைந்தபட்சம் 8 மாதமாவது உணவை உண்ண கால தாமதமாகும்.
அந்த இடைப்பட்டக் காலம் வரை உணவு எங்கும் கெட்டுப் போகாமலிருக்க எண்ணிக்கையிடங்காத அளவு இராசாயணங்களால் ( Preservatives ) குளிப்பாட்டப் படுகிறது. இதை உண்ணும் போது உணவுப் பாதைக்கு சென்று செரிமானமாகமல் கொழுப்பாக, கழிவாக உடலில் தேங்கி புற்றுநோயை உண்டாக்குகிறது.
மேலும் இது போன்ற உணவுகளை நாம் ஊக்குவிப்பதால் தான் இன்று உணவு தானியங்களின் பதுக்கல் அதிகரித்து விலைவாசி ஏற்றம் கட்டுப் படுத்த முடியால், தெருவுக்கு தெரு பலவித மருத்துவமனைகள் உருவெடுத்துள்ளது.
இந்த நிலை மாற வேண்டுமானால் நம்மாழ்வார் ஐயா கூறியது போல்
Food should be locally produced
உள்ளூரிலே உற்பத்தி செய்ய வேண்டும்
Food Should be locally Consumed
உள்ளூரிலே நுகரப்பட வேண்டும்
It Should be Fresh & Taste நமக்குப் பழக்கப் பட்ட உணவாகவும் சுவையானதாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் ஒருவர் உண்ணும் உணவு உலகில் ஏதோ ஒரு பகுதியில் விளைந்து உலகம் முழுவதும் பயணம் செய்து குறைதது 2500 கிலோ மீட்டர் பயணம் செய்து பின் தட்டில் உண்ண கொடுக்கப் படுகிறது.
தேன்கனி பாரம்பரிய அறுசுவைகயகம் :
********************************************************
இது போல் நம்மாழ்வார் ஐயாவின் பல்வேறு கருத்துக்களால் பெரிதும் தூக்கமிழந்து தன் வாழ்க்கைப் பாதையை மாற்றிய நபர்களில் ஒருவர் ” தேன்கனி க.முத்துக்குமார் ” . கடந்த மூன்று ஆண்டுகளாக தன்னால் இயன்றவரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தான் மட்டும் நகரவில்லை. தன்னோடு சேர்ந்து ஒரு சமூகத்தையும் மாற்றம் அடைய செய்துள்ளார்.
தேன்கனி அமைப்பின் ஒரு பகுதியான தேன்கனி பாரம்பரிய அறுசுவைகயகம் என்று பலரை இணைத்து குழுவாக உருவாக்கி செயல்பட்டுவருகிறார்.
நம்மாழ்வார் ஐயாவின் கருத்துக்கள் விவசாயிகளின் வாழ்க்கையை மட்டுமே மாற்றக் கூடியது என்று பலர் நம்புவதுண்டு. ஐயாவிடம் நன்கு பழகியவர்களுக்கு மட்டும் தான் தெரியும் நம்மாழ்வார் என்பவர் இயற்கையை நேசித்து வாழத்துடிக்கும் எல்லா துறைகளிலும் வாழ்பவர்கள் மனதிலும் கருத்துக்களை விதைத்தவர்.
அத்தகைய ஐயாவின் கருத்துக்களால் , இளைஞர் முத்துக்குமார் ஐயாவிடம் பெற்ற பயிற்சியுடன் தன்னுடைய தந்தையார் நடத்தி வந்த வழக்கமான பலகாரக்கடையை இன்று பாரம்பரிய பலகாரக் கடையாக மாற்றி வருகிறார்.
மேலும் தேன்கனி வாழ்வியல் பண்ணையில் 1ஏக்கர் மானாவாரி நிலத்தில் கிடைக்கும் குறுகிய நேரத்தில் குதிரைவாலி, சோளம் பயிரிடுகிறார். அதில் கிடைக்கும் பொருட்களுடன், தனக்குத் தேவைப்படும் மற்ற இயற்கை சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசிகள், செக்கு எண்ணெய்களை தேன்கனி உழவர்களிடம் நேரடியாகப் பெற்று அதை பலகாரகமாக மாற்றுகிறார்.
கடந்த 3ஆண்டுகளாக தேன்கனி உழவர் ஞாயிறு சந்தை, தெரிந்த இயற்கை அங்காடிகள், வெளியூர் நண்பர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக பண்டிகைகால ஆர்டரையும் செய்ய வேண்டும் என முயற்சி செய்தார். அதன் பலனாக ஏற்கனவே இவருடைய பலகாரங்களை உண்டு சுவை பார்த்த மக்கள் கொடுத்த ஊக்கத்தினால் இந்த தீபாவளிக்கான முன்பதிவைத் தொடங்கினார்.
அவர் எதிர் கொள்ளும் சவால்கள் :
*********************************************
இன்று இரசாயன கலப்புள்ள பேக்கிரி உணவுகள் சந்தையை ஆக்கிரமித்து உள்ளது. அதற்கான விளம்பரங்கள், ஆடம்பரங்கள், வண்ணங்கள், சுவைகள், உணவு கெட்டுப் போகாமல் அதிக நாள் நிலைத்திருக்கும் தன்மை போன்றவைகள் மக்கள் மத்தியில் இதுதான் சரியான உணவு, ஆனால் உடலுக்கு ஏதோ கேடு செய்யத்தான் செய்கிறது என்கிற உண்மையை ஏற்றுக் கொள்ளக் கூடியது.
இதற்கு அடுத்தபடியாக சரியான மாற்று என்று மக்கள் மட்டுமல்ல இயற்கை அங்காடிகள் கூட நம்புவது சிறுதானிய ரொட்டி ( cookies ) என்பதும், பாமாயில் அல்லது ரைஸ் பிரான் ஆயிலில் செய்த பலகாரங்கள், சிறுதானியங்கள் பயன்படுத்தி வெள்ளை சர்க்கரை மற்றும் பல இரசாயன்ங்கள் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள் தான் இவைகளும்.
இது சரியா ? அல்லது பராவாயில்லையா ? என்பது சிந்திக்க வேண்டிய பகுதி….
நம்முடைய நலனுக்கு என்றைக்கு சமரசம்
ஆகிறோமோ அன்று தான் தீமையின் திசைகளில்
கால் வைக்கத் துவங்குகிறோம்...
இயற்கை வாழ்வியல் வழிகாட்டி “ கோ. நம்மாழ்வார்
ஐயா கூறிய இந்த வார்த்தையை ஆழமாக நாம் புரிந்து கொண்டோமேயானால் நாம் மாற்று என்கிற பெயரில் சமரம் அடைய மாட்டோம்.
இது போல் சமரம் என்பது சிறு அளவுகூட இருக்கக் கூடாது என்பது இளைஞர் முத்துக்குமாரின் கொள்கை.
அதன் படி பலகாரங்களுக்கான மூலப் பொருட்கள், சுவை, நிறம், கெட்டுப் போகாமல் பொருட்களின் தாங்கும் நாள் (Expiry date), உழைப்பு என்பது முழுவதுமே சவால் நிறைந்தது. அதற்கு அவர் கையாளும் முறையே மிக எளிமை.
இயற்கை இயல்பானது, அதற்கு ஆடம்பரம் கிடையாது. செயற்கைப் பூச்சுத் தேவையில்லை. செயற்கை மணம் தேவையில்லை என்கிற கருத்தை ஏற்பவருக்கு மட்டுமே விற்பனை செய்கிறார். வழக்கமான(பேக்கரி) உணவுகளை போல் இவரின் பலகாரங்களை எதிர் பார்ப்பவர்களுக்கு “ அவர் அளிக்கும் பதில் இது உங்களுக்கான உணவு அல்ல “
இத்தகைய சாவால்களைத் தாண்டி 3ஆண்டுகளாக பல்வேறு வகையான பலகாரங்களை உருவாக்கி வருகிறார். அத்தகைய அனுபவத்தோடு தேன்கனி குழுவில் இருக்கும் நண்பர்களின் பலகாரங்களையும் ஒருங்கிணைத்து மொத்தமாக நம்முடைய பாட்டி முற்காலத்தில் செய்து கொடுத்த கைப்பக்குவத்தில் இந்த தீபாவளிக்கு தேன்கனி சிறப்பு பலகாரங்களை உருவாக்கி அனைவரின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.



அவைகளின் பட்டியல் :
இனிப்புக்கள் :
******************
கருப்பட்டி நவதானிய திரிகடுகம் அல்வா
சீரக சம்பா அதிரசம்
பூந்தி லட்டு
வரகு கருப்பட்டி ஜிலேபி
வரகு கரும்பு சர்க்கரை ஜிலேபி
எள்ளு உருண்டை
கடலை உருண்டை
பேரீட்சை லட்டு
திரிகடுகம் கடலை மிட்டாய்
மாப்பிள்ளை சம்பா அவல் இனிப்பு மிட்டாய் பொரி
கார வகைகள் :
*******************
சாமை மிக்சர்
கேழ்வரகு மிகசர்
சாமை முறுக்கு சேவு
வரகு காரச் சேவு
குதிரைவாலி ரிப்பன் சீவல்
குதிரைவாலி ஓமப் பொரி
நவதானிய கருப்பட்டி சாக்குலேட்
மாப்பிள்ளை சம்பா அவல் காரப் பொரி
கேழ்வரகு முடக்கற்றான் கீரைப் பக்கோடா
இவையனைத்தும் சுத்தமான செக்கு கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய்கள் மட்டுமே பயன்படுத்தி சீனி, மைதா, கோதுமை துளிஅளவும் பயன்படுத்தாமல் செய்தார். மேலும் இரசாயணங்களும் பயன்படுத்தாமல் இயற்கை வழியில் விளைந்த நமது மண்ணின் பாரம்பரிய சத்துமிகு சிறு தனியாங்களான வரகு, சாமை, திணை, குதிரைவாலி, மாப்பிள்ளை சம்பா அரிசி, எள்ளு, பாசிப்பயறு, நிலக்கடலை, கரும்பு சர்க்கரை, கருப்பட்டி, மண்ணை வெல்லை மற்றும் பயறு வகைகளால் பலகாரங்களைத் தயாரித்தார்.
இந்த உணவுகளை தயாரிக்க அவருக்குத் துணையாக தந்தை திரு. கணேசன் ஐயா, தாய் மாரித்தங்கம், தங்கை முனீஸ்வரி மற்றும் வைத்தியர் கருப்பசாமி, வனிதா, பாஸ்கர் குடும்பத்தினர் & பல வயதான பெண்களின் துணையுடன் குழுவாக தயாரித்தார்.
அந்தப் பலகாரங்களை கடந்த 10 நாட்களாக தேர்வு செய்யப்பட்ட சிவகாசி , விருதுநகர், இராஜபாளையம் , அருப்புக் கோட்டை, மதுரை, சென்னை, நெய்வேலி, கரூர், அரியலூர், கோவை போன்ற தமிழகத்தின் பல பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு நேரடியாகவும், இயற்கை அங்காடிகளுக்கும் லாரி சர்வீஸைப் பயன்படுத்தி அனுப்பியுள்ளார்.
வாழ்க்கையை உயர்த்திய தருணம் :
************************************************
இந்தப் பலகாரங்களை உண்ட சிவகாசியைச் சேர்ந்த நண்பரின் குடும்பத்தினர் தன்னுடைய மகளுடைய திருமணத்திற்கு சீதனமாக அளிக்கும் பலகாரங்களில் இது தான் இடம் பெற வேண்டும் என முடிவு எடுத்துள்ளோம், செய்து கொடுக்க முடியுமா ?
இன்னொருவர் தன்னுடைய குழந்தையின் பிறந்த நாளுக்கு சாக்லோட் கொடுக்காமல் இனி இந்தப் பலகாரங்கள் தான் என்றார்.
இந்த நம்பிக்கை அவருடைய வாழ்க்கைப் பயணத்தை முன்னோக்கி நகர்த்தியுள்ளது.
இனி வார வாரம் பலகாரங்கள் :
******************************************
இனி ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளுக்குள் பலகாரங்களை ஆர்டர் செய்தால் வெள்ளிக் கிழமைகளில் அளிக்க உள்ளார்.
இயற்கை அங்காடி மற்றும் வெளியூர் நண்பர்களுக்கு கொரியர் அல்லது பார்சல் சர்வீஸில் அனுப்பத் தயாராகி உள்ளார்.
இயற்கையில் பணி செய்வோருக்கு
இயற்கை கூலி கொடுக்கிறது. அது தான் மனநிறைவு.
என்கிற நம்மாழ்வார் ஐயாவின் வரிகளை நினைவு படுத்துகிறார்.
இது மட்டுமல்ல நண்பர்களே உங்களாலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்..
நன்றி..
தொடர்புக்கு :
தேன்கனி க.முத்துக்குமார் 97876 48002
https://www.facebook.com/profile.php?id=100013428186669
சிவகாசி.

2 comments:

  1. சீரக சம்பா அதிரசம் ultimate !!!

    ReplyDelete
  2. தொதல் என்கிற கருப்பட்டி அல்வா கிடைக்குமா?

    ReplyDelete